1,900-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடற்கரைகளில் கரைப்பு!

vinayagar statues dissloved

சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  நேற்றைய தினம் 1,962 விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 31-ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 1,962 விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டன.

இந்த சிலைகள் அனைத்தும் பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய கடற்கரை பகுதிகளில் கரைக்கப்பட்டதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version