சென்னையில் இன்று கரைக்கப்படவுள்ள விநாயகர் சதுர்த்தி சிலைகள்!

vinayagar statues

சென்னையில் விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படவுள்ளன.

விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த மாதம் 31-ம் தேதி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள 3 ஆயிரம் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதி, காசிமேடு, நீலாங்கரை பல்கலை நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை கடலோர பகுதி ஆகிய 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகர் முழுவதும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version