நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டித்து கிராம மக்கள் நூதன போராட்டம்!

கூத்தாநல்லூர் தாலுகாவுக்கு உட்பட்ட சேகரை கிராமத்தில் அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமிப்பாளர்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து தொடர் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதைக் கண்டித்து அக்கிராமத்தினர் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் தொடர்ந்து நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசு அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள், தூக்குமாட்டிய விவசாயி உருவபொம்மையை பாடையில் கட்டி வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்தும் ஊர்வலமாக எடுத்துச்சென்று சுடுகாட்டில் உருவபொம்மையை எரித்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version