திருவாரூரில் ஆன்லைன் முறையில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆன்லைன் முறையில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். முத்துப்பேட்டை பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தில்லைவிளாகம் பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர். விடியா ஆட்சியில் நூதன முறையில் நடைபெறும் முறைகேடுகளால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

 

Exit mobile version