விரைவில் பிரசாரத்திற்கு வந்து பேசுவேன் – விஜயகாந்த்

விரைவில் பிரசாரத்திற்கு வர இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், பிரதமர் மோடி நல்லவர் என்றும் அவர் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதிமுக கூட்டணிதான் ஜெயிக்கும் என்றும், திமுக கூட்டணி தோற்கும் என்றும் விஜயகாந்த் கூறினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், விரைவில் பிரசாரத்திற்கு வர இருப்பதாக தெரிவித்து இருப்பது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version