மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்!

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அன்றாட மருத்துவப் பரிசோதனைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பிய விஜயகாந்த், இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவக் குழுவின் தொடர் கண்காணிப்பின் மூலம், அனைத்து கதிரியக்கப் பரிசோதனைகளிலும், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version