அமெரிக்காவிலிருந்து சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய விஜயகாந்த்

அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை திரும்பினார்.

விமானநிலையத்தில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விஜயகாந்திற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு விஜயகாந்தை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் தொண்டர்கள் உற்சாக முழக்கங்களை எழுப்பினர். பின்னர், விமானநிலையத்தில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் புறப்பட்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, நீண்ட பயணம் காரணமாக விஜயகாந்த் களைப்புடன் இருப்பதாகவும், தற்போது அவர் பூரண நலமுடன் உள்ளதாகவும் கூறினார். தேர்தல் கூட்டணி பற்றி விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் என்று அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version