அமெரிக்கா, சிங்கப்பூரில் இருந்து இந்தியா வந்த 2 பேருக்கு கொரோனா அறிகுறி!

அமெரிக்கா, சிங்கப்பூரில் இருந்து வந்த 2 பேர், கொரோனா அறிகுறியுடன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய, நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொல்லை பகுதியை சேர்ந்தவர், சளித்தொல்லை காரணமாக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரொனா பாதிப்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின்பேரில், மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோன்று கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து திரும்பிய, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த முருகையன் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version