"விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளது" – தேமுதிக விளக்கம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென விஜயகாந்துக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது மனைவி பிரேமலதா மற்றும் அவரது மகன் ஆகியோர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் விஜயகாந்த்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வழக்கமாக மேற்கொள்ளபப்டும் பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தேமுதிக விளக்கம் அளித்து இருக்கிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் விஜயகாந்த வீடு திரும்புவார் என்று தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version