குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் தருவதாக விடியா அரசு ஏமாற்றிவிட்டது – முன்னாள் அமைச்சர்

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனைமலை தென்சங்கம்பாளையம் பகுதியில், ஆனைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி, கழக விவசாய பிரிவு துணை செயலாளர் கணேசமூர்த்தி, தலைமை கழக பேச்சாளர் குன்னூர் சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்த பொதுக்கூட்டத்தில் மாரப்பன்கவுண்டன் புதூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் 1,000 ரூபாய் தருவதாக கூறி விடியா அரசு மக்களை ஏமாற்றிவிட்டதாக விமர்சித்தார்.

Exit mobile version