குஷி ஜோதிகாவுக்கே டஃப் கொடுத்து நீரில் ஆட்டம் போடும் யானை

யானை ஒன்று பசும்புல் வெளியில்  குழந்தை போல் கியூட்டாக தண்ணீரில் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

யானையின் உருவத்தை பார்த்து மனிதர்களாகிய நாம் பயந்து தெறித்து ஓடுவோம். ஆனால் அந்த யானைக்குள்ளும் குழந்தை தனம் இருக்கிறது என்பதை  யானை ஒன்று நிரூபிக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா விலங்குகளின் பிரியர் ஆவர். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விலங்குகள் செய்யும் குறும்புத் தனங்களை அவ்வப்போது இணையதளத்தில் வெளியிடுவார். அந்த வரிசையில்

யானை ஒன்று பசும்புல் வெளியில் ஸ்ப்ரிங்கரை உடைத்து பீய்ச்சி அடிக்கும் தண்ணீரில் குதூகலமாக குழந்தை போல் விளையாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டு, அதில்  யானைகள் புத்திசாலித்தனம் கொண்டவை மட்டும் அல்ல நாம் நம்ப முடியாத அளவிற்கு விளையாட்டுத்தனம் கொண்டவையும் கூட என்றும் கூறியுள்ளார். இந்த  யானையின் இந்த குறும்புச் செயல்பாடு பார்ப்போரை மனம் குளிர வைக்கின்றது.

 

Exit mobile version