பெரிய கோவில் குடமுழுக்கு விழாவிற்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள்

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் மிகச்சிறப்பாக உள்ளதாக பக்தர்களும், வெளிநாட்டு பயணிகளும் தெரிவித்துள்ளனர்.

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள பேருந்துகளில் வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து 125 சிறப்பு வாகனங்கள் கட்டணமில்லாமல் இயக்க உள்ளன.

தற்காலிக பேருந்து நிலையம் மற்றும் தற்காலிக வாகன நிறுத்தும் இடங்களில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, தகவல் மையம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version