டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் பாதிப்பு – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை ஆய்வு

கஜா புயல் பாதித்துள்ள டெல்டா மாவட்டங்களில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

கஜா புயலுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்குமாறு பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வலியுறுத்தினார். புயல் பாதித்த மாவட்டங்களில் மத்தியக் குழு மூன்று நாள் ஆய்வை முடித்துள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம் கட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், கஜா புயல் புரட்டிப்போட்ட மாவட்டங்களில் நாளை நேரில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசுக்கு அவர் அறிக்கை அளிப்பார் என்று தெரிகிறது.

Exit mobile version