ஆள்மாறாட்டம் புகாரில் சிக்கிய மாணவர் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் சிக்கியுள்ள மாணவர் உதித் சூர்யா முன்ஜாமின் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மாணவன் உதித் சூர்யா தலைமறைவு என கூறப்படும் நிலையில், முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரி பார்ப்பிற்கு பிறகே கல்லூரியில் சேர்ந்ததாக மனுவில் மாணவர் குறிப்பிட்டுள்ளார். உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் தொடர்ந்து படிக்க முடியாமல் கல்லூரியில் இருந்து விலகியதாக மனுவில் அவர் தெரிவித்துள்ளார். மாணவன் உதித் சூர்யாவின் முன்ஜாமின் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version