ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை !

குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரமத்தில் தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா கட்டார் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பெண்களிடம் தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக இரண்டு பெண்கள் கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பான விசாரணை அறிக்கையை தயார் செய்து மகளிர் ஆணையத்தில் சமர்பிக்க உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா கட்டார் தெரிவித்துள்ளார்.

Exit mobile version