தாய் பசுவை கண்டுபிடித்து தரக்கோரி மனு கொடுத்த கன்றுக்குட்டி!

விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் அருகேயுள்ள கொட்டியாம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தன். இவர் பசுமாடு, கன்றுக்குட்டியை பாசமாக வளர்த்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 19 ஆம் தேதி முதல் இவரது பசு மாடு ஒன்றை காணவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் வேதனையடைந்த கோவிந்தன் மற்றும் அவரது மனைவி சுபாஷினி, நூதன முறையில் பசுவின் கன்றுக்குட்டி கழுத்தில் “எனது அம்மாவை கண்டுபிடித்து கொடுங்க ஐயா” என்ற பதாகையை அணிவித்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர். இது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

Exit mobile version