அரசு நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணிக்கும் திமுக அமைச்சர்கள்!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, அரசின் நலத்திட்ட உதவிகள், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில், அமைச்சர்கள் பொன்முடி மற்றும் மஸ்தான் ஆகியோர் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், எந்த தகவலும் அளிக்காமல், இருவரும் ஈரோடு தேர்தல் பணிக்கு சென்றுள்ளனர். ஆயிரக்கணக்கில் செலவு செய்து விழா ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், பெயரளவிற்காக மட்டுமே அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உணவு பாதுகாப்புத் துறை சார்பாக வைக்கப்பட்டுள்ள கடைகளில், அந்த துறையினரே திண்பண்டங்களை சாப்பிடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அரசு விழாக்களுக்கு அமைச்சர்கள் வர முடியவில்லை என்றால் எதற்காக நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசுத்துறை அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை கேள்வி எழுப்புகின்றனர்.

Exit mobile version