நின்றுகொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெங்களூரைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவர், திருவண்ணாமலையைச் சேர்ந்த மற்றொரு இளைஞருடன் பெங்களூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஓசூர் அருகே கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது ஓரமாக நின்றுகொண்டிருந்த சிமெண்ட் லாரி மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூளகிரி போலிசார் வழக்குப் பதிவு செய்து இளைஞர்களது உடலை ஓசூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Exit mobile version