புழு சிக்கன் பிரியாணி-"புழு இருப்பது எல்லாம் ஒரு புகாரா, சாப்பிட்டு போங்க"

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசுர் அருகேயுள்ள ஸ்டார் பிரியாணி ஹோட்டலில், சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தவர்களுக்கு, பிரியாணியில் புழு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சின்னார் என்னுமிடத்தில் உள்ள ஸ்டார் பிரியாணி ஹோட்டலில், சப்பாணிபட்டியை சேர்ந்த நண்பர்கள் 5 பேர் உணவருந்த சென்றுள்ளனர்.

4 சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்த அவர்கள், சிக்கன் பிரியாணி வந்ததும், அதனை சாப்பிட எடுத்தப்போது, அதில் புழு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர்.

அப்போது, கத்திரிக்காயிலிருந்து புழு வந்திருக்கலாம் என ஹோட்டல் நிர்வாகம் அலட்சியமாக பதில் அளித்ததால் கோபமடைந்த இளைஞர்கள், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, பெங்களூருவில் உள்ள ஹோட்டல் மேலாளரிடம் பேசிய போது, அவர் பிரியாணியில் புழு இருந்ததெல்லாம் ஒரு புகாரா என்று கேட்டு, பேசாமல் சாப்பிட்டு போங்கள் என்று கூறியது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக, இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.

தவறை திருத்திக்கொள்ளமால், அலட்சியம் காட்டும் ஹோட்டல் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version