உயிரிழந்த ராணுவவீரரின் குடும்பத்தாரிடம் மத்திய ராணுவ போலீஸ் விசாரணை !

வேலம்பட்டி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் பிரபுவின் குடும்பத்தார் மீது நாகோஜனஹள்ளி திமுக கவுன்சிலர் தாக்குதல் நடத்தியதில் பிரபு உயிரிழந்தார். இந்நிலையில் பெங்களூரூவிலிருந்து வந்த ராணுவ போலீசார் 5 பேர், தலையில் காயமடைந்த பிரபுவின் சகோதரர் பிரபாகரனிடம் விசாரணை மேற்கொண்டனர். நடந்த சம்பவத்தை குடும்பத்தாரிடம் வாக்குமூலமாக பெற்ற தகவல்களை ராணுவ உயர் அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக தெரிவித்தனர்.

Exit mobile version