தோட்டக் காவல் பணிக்காக சென்ற 2 பேர் கழுத்தறுத்து கொலை

நீலகிரியில் ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தரி அருகேயுள்ள மெட்டுக்கல் இருளர் இன கிராமத்தில் 20-க்கும்  மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு,  இரவில் தோட்ட காவல் பணியில் ஈடுபட்டிருந்த ராமசந்திரன் மற்றும் திம்மன் ஆகியோர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், கீழ்கோத்தாரி சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Exit mobile version