முன்விரோதம் காரணமாக இருவர் வெட்டிக்கொலை :போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே முன்விரோதம் காரணமாக இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்தவர் சுடலைமணி. அதேபோன்று, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இருவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், முன்னீர்பள்ளம் அருகே சாலை ஓரம் பேசிக்கொண்டு இருந்த இவர்களை, மர்ம கும்பல் சுற்றி வளைத்தது. அங்கிருந்து தப்பிக்க முயன்ற அவர்களை மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கியது. இந்த தாக்குதலில் சுடலைமணி மற்றும் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version