கட்டுமான பொருட்களை திருடியவர்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கட்டுமான பொருட்களை திருடிய இருவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பொன்னேரி தசரதன் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு ஒன்றிலிருந்து கட்டுமான பொருட்கள், இரும்புகளை இருவர் திருடியுள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை துரத்தி பிடித்தனர். பிடிபட்ட இருவரையும் பொதுமக்கள் சரமாரியாக தாக்கி பொன்னேரி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். கொள்ளையர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version