தனியார் பேருந்து மோதியதில் இருவர் பலி-பேருந்துக்கு தீ வைப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதில், இருவர் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பேருந்துக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பழனி அடுத்த சிந்தலவாடம்பட்டியில்  விவசாயி துர்க்கையப்பன் என்பவர் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து, துர்க்கையப்பனுடைய இருசக்கர வாகனத்தில் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே துர்க்கையப்பன் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி உயிரிழந்தனர். படுகாயமடைந்த விஜயலட்சுமியின் தாயார் அங்கம்மாள், ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிந்தலவாடம்பட்டி பொதுமக்கள் தனியார் பேருந்துக்கு திடீரென தீ வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மூன்று வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். பேருந்து எரிக்கப்பட்டதால் சுமார் இரண்டுமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Exit mobile version