டி.டி.வி தினகரன் அ.தி.மு.க உறுப்பினர் இல்லை என்பதால் அவரை மீண்டும் கட்சிக்கு அழைக்கவில்லை – எடப்பாடி பழனிசாமி

டி.டி.வி தினகரன் அ.தி.மு.க உறுப்பினர் இல்லை என்பதால் அவரை மீண்டும் கட்சிக்கு அழைக்கவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனுவில் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் பாதை மாறி சென்றுள்ளதாகவும் அதனால் அவர்களை கட்சிக்கு திரும்ப அழைத்ததாகவும் தெரிவித்தார். இதில் தினகரன் அ.தி.மு.க உறுப்பினர் இல்லை என்பதால் அவரை அழைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும் தம் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் தி.மு.க வழக்கு தொடர்ந்ததாகவும் ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பால் அவை முறியடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். பருவமழையை சேமிப்பதற்காக தடுப்பணைகள் கட்டுவதற்கு ஓய்வு பெற்ற பொறியாளர்கள் 6 பேர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இதற்காக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். காவிரி பாசனம் பெறும் மாநிலங்களிடையே ஒத்த கருத்து நிலவினால் மட்டுமே புதிய அணை கட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version