திருவள்ளூர் அருகே இளைஞரை கொலை செய்து உடலை புதைக்க முயற்சி

திருவள்ளூர் அருகே இளைஞரை அடித்துக் கொலை செய்து ஏரிக்கரையில் உடலை புதைக்கை முயன்றவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூரில் ஏரி பகுதியில் விவசாய தொழிலாளர்கள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது, அங்குள்ள முட்புதர் பகுதியில் சத்தம் கேட்டதால் அங்கு சென்றுள்ளனர். இதையறிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து ஒடியுள்ளனர். சந்தேகமடைந்து தொழிலாளர்கள் அருகில் சென்ற பார்த்த போது இளைஞரின் உடல் பாதி புதைந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Exit mobile version