தள்ளுவண்டி உணவகம் வைத்திருந்தவர் வெட்டிக்கொலை

சென்னையில் தள்ளுவண்டி உணவகம் நடத்தி வந்தவரை அரிவாளால் வெட்டி கொலை செய்தவர்களை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவர் அதே பகுதியில் தள்ளுவண்டி உணவகம் நடத்தி வந்தார். இந்நிலையில், சேனியம்மன் கோவில் தெருவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு ரவியை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தண்டையார்பேட்டை போலீசார் ரத்தவெள்ளத்தில் இருந்த ரவியை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரவி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமிரா பதிவை கைப்பற்றிய போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Exit mobile version