பொங்கல் பரிசு : தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை

சர்க்கரை பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க அனுமதி கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனிடையே வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சர்க்கரை மட்டும் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க அனுமதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற இருக்கிறது.

Exit mobile version