தைப்பூசத்தையொட்டி பழனியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு – போக்குவரத்து மாற்றம்

தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் பழனி செல்லும் வாகன போக்குவரத்து தாராபுரம் சாலை வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தைப்பூச திருவிழாவையொட்டி காரைக்குடி, காரைக்கால், கரூர், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு செல்ல ஒட்டன்சத்திரம் வழியாக செல்வது வழக்கம். அதனடிப்படையில், இந்தாண்டு பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பழனி செல்லும் வாகன போக்குவரத்து தாராபுரம் சாலை வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version