இரவு நேர ஊரடங்கு: பேருந்து முன்பதிவு பணம் வாபஸ்

இரவு நேர ஊரடங்கு காரணமாக, இரவு நேரப் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டதாகவும், முன்பதிவுக்கான கட்டணம் திரும்ப செலுத்தப்படும் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, இரவு நேர பேருந்து பயணம் ரத்து செய்யப்படுவதாக தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இதேபோன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஞாயிற்றுக் கிழமைகளில் பேருந்துகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கான கட்டணம் திரும்ப வழங்கப்படும் எனவும், இரவு நேரத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு பகல் நேரத்தில் பயணம் செய்ய மாற்றித் தரப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் பயணம் செய்ய புதிதாக முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version