ஊரடங்கில் மேலும் தளர்வுகள்?

ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது.

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு, மூன்று வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக மாவட்டங்களுக்குள் பொது போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டன. இந்த நிலையில், ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது. இதில், கொரோனா பரவல் அதிகமாக காணப்பட்ட 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version