மூணாறில் அதிகளவு குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்

விடுமுறை தினத்தையொட்டி இடுக்கி மாவட்டம் மூணாறுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தென்னகத்து காஷ்மீர் என்று கூறப்படும் மூணாறில் விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்த வண்ணம் உள்ளனர். கோடை வெப்பத்தில் இருந்து காத்து கொள்ளவும், மூணாறில் நிலவும் கால நிலையை அனுபவிக்கவும், தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

முக்கிய சுற்றுலா தலமாக கருதப்படும் மாட்டுப்பட்டி பகுதியில் உள்ள டாப் ஸ்டேஷன், குண்டளை அணை, எக்கோ பாயிண்ட் பகுதிகளை ரசித்து வருகின்றனர். மாட்டுப்பட்டி அணையில் சுற்றுலா பயணிகள் உல்லாச படகு சவாரி மேற்கொண்டு வருகின்றனர். மூணாறில் காலை நேரத்தின்போது வெயில் இருந்தாலும், பிற்பகலில் இதமான சூழல் நிலவுகிறது.

Exit mobile version