சுருளி அருவியில் குளிக்க தடை நீக்கம்; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் சுருளி அருவிக்கு நீர்வரத்து குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வந்த மழை குறைந்துள்ளதால், அருவிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்.

Exit mobile version