மூணாறு அருகே சாலையில் விரிசல்: பொதுமக்கள் பாதுக்காப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை

கேரள மாநிலம் மூணறு அருகே சாலையில் ஏற்பட்ட விரிசல் காரணமாக முத்துக்காடு பகுதியில் உள்ள குடும்பங்கள் வேறு இடத்திற்கு மாறுமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மூணாறு அருகேயுள்ள பெரியகனால் பகுதியில், 60 ஏக்கர் பரப்பளவுள்ள பி டிவிஷனில் நிலஅதிர்வு உணரப்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அதிக சத்தத்துடன் சாலையில் விரிசல் ஏற்பட்டது. கடல் பரப்பில் இருந்து 3 ஆயிரத்து 848 அடி உயரத்தில் அமைந்துள்ள முத்துக்காடு மலை அருகே ஏற்பட்ட நில நடுக்கத்தின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இடுக்கி மாவட்டம் முழுவதும் மழை தற்போது குறைந்துள்ள நிலையில், மீண்டும் மலை பெய்யும் என்பதால், நிலச்சரிவின் காரணமாக ஏற்பட்ட விரிசல்களில் இறங்கி பெருமளவு சேதத்தை ஏற்படுத்தும் என்பதால், இங்குள்ள 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version