இருவாட்சி இன பறவைகள் புகைப்படம் எடுக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்

இருவாட்சி இன பறவைகள் முகாமில் அப்பறவைகளை புகைப்படம் எடுக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருவாட்சி பறவைகள் முகாம் உள்ளது. இருவாட்சி என்பது இருவாய்ச்சி குடும்ப இனப்பறவைகளின் குடும்பப் பெயர் ஆகும். இந்த பறவைகள் அளவில் சற்று பெரியவையாகவும், வானில் பறக்கும்போது ஹெலிகாப்டர் செல்லும் சத்தத்தை எழுப்பக்கூடியது.

பார்ப்பதற்கு அழகாய் இருக்கும் இருவாச்சி பறவைகள் உலகம் முழுவதிலும் 54 வகைகளாக இருந்து வருகின்றன. தற்போது இங்குள்ள இருவாச்சிகளை புகைப்படம் எடுக்க வன உயிர் ஆர்வலர்கள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.

Exit mobile version