நள்ளிரவில் திடீரென உயர்த்தப்பட்ட சுங்கக் கட்டணம்! விடியா அரசின் ஆட்சியால் விழிபிதுங்கும் பொதுமக்கள்!

tollgate fees increased

தமிழகத்தில் 28 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள கட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 22 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் திடீரென நள்ளிரவு முதல் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வகையில், திருச்சி சமயபுரம், கரூர் மனவாசி, நாமக்கல், தருமபுரி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. பழைய கட்டணத்தை ஒப்பிடுகையில் 15 சதவீதம் சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version