நடிகர் செந்திலுக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மோசடி

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரான செந்திலுக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சாலிகிராமம் பாஸ்கர் காலனியில் நடிகர் செந்திலுக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. மொத்தம் 10அறைகள் கொண்ட இந்த கட்டிடத்தை கடந்த 2013ம் ஆண்டு சகாயராஜ் என்பவர் மாதம் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு வாடகைக்கு எடுத்து “சர்வீஸ் அப்பார்ட்மென்ட்” நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சகாயராஜ் கடந்த 6 மாதமாக வாடகை செலுத்தவில்லை. தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததால் சந்தேகமடைந்த செந்தில் வீட்டை நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போது அந்த கட்டிடத்தை தனது சொந்த கட்டிடம் எனக்கூறி 7 அறைகளை “லீஸ் மற்றும் வாடகைக்கு” விட்டு சகாயராஜ் சம்பாதித்து வந்தது தெரியவந்தது..

இதனால் அதிர்ச்சியடைந்த நடிகர் செந்தில், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த சகாயராஜை கைது செய்து சிறையில் அடைந்தனர். சிறையில் அடைக்கப்பட்ட சகாயராஜ் சினிமா துறையில் புரொடக்சன் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version