கோட்டூர்புரத்தில் சாலையில் வீசப்பட்ட ரூ.1.56 கோடி, கொள்ளை பணம் என தகவல்

சென்னையில் போலீசார் வாகன சோதனையின் போது சாலையில் வீசப்பட்ட 1கோடியே 56 லட்சம் ரூபாய், கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சென்னை கோட்டூர்புரத்தில் இன்று அதிகாலை போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் சுற்றிய இரண்டு பேரை போலீசார் பிடிக்க முயன்றனர். இதையடுத்து அந்த நபர்கள், தாங்கள் வைத்திருந்த 3 பைகளை வீசிவிட்டு போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்றனர்.

சாலையில் கிடந்த பைகளை போலீசார் சோதனை செய்தபோது, அதில் 1கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபார் இருப்பதை கண்டுபிடித்தனர். அந்தப் பணம் சைதாப்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. அவர் அளித்த புகாரின் பேரில் கொள்ளை அடித்த நபர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version