பட்டாசு தொழிலை சரிசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது – அமைச்சர் பெஞ்சமின்

பட்டாசு தொழிலை சரிசெய்ய தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க. கொண்டுவந்த கவனஈர்ப்பு தீர்மானத்தையடுத்து பேசிய அவர் இதை கூறியுள்ளார்.

பட்டாசு தொழில் பாதிப்பு குறித்து தி.மு.க. சார்பில் உறுப்பினர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவால் பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்து விலக்கு பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து பேசிய அமைச்சர் பெஞ்சமின், பட்டாசு தொழிலை சரிசெய்ய தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்தார். பட்டாசு தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு, தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version