மளிகை, காய்கறி போல மீன் விற்பனைக்கும் அனுமதி வேண்டும் – மீனவர் சங்கம் கோரிக்கை

மளிகை பொருட்கள், காய்கறி போல மீன் விற்பனைக்கும் அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மீனவர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஊரடங்கு காலத்தில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆன்லைனில் மட்டும் மாமிச விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நேரடி விற்பனைக்கும் அனுமதிக்க வேண்டும் என்பது மீனவ சங்கங்களில் கோரிக்கை. அத்தியாவசிய பொருட்களை வீடு வீடாக சென்று விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மீனையும் அத்தியாவசிய பொருளாக கருதி வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version