தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளற்ற ஊரடங்கு கடந்த திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்தது. ஒருவாரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவாரம் தளர்வுகளற்ற ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, ஜூன் 7ம் தேதி காலை 6 மணி வரை தற்போதிருக்கும் அதே நடைமுறை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Exit mobile version