தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பக்ரீத் வாழ்த்து

தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பக்ரீத் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு பக்ரீத் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கடவுள் மீது வைத்துள்ள பக்தியின் காரணமாக புனித தந்தையானவர் உயரிய தியாகம் செய்ய முன்வந்ததை பக்ரீத் தினம் நினைவு கூறுவதால், ஒவ்வொருவரும் அவர்களுடைய எண்ணங்களையும், செயல்களையும் கடவுளிடம் அர்ப்பணிக்கும் விதமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த புனித திருநாளில், நாம் அனைவரும் பெருந்தன்மை, சகிப்புத்தன்மை மற்றும் இரக்க உணர்வோடு வாழ்வோம் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Exit mobile version