வரும் 12 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்: தலைமை காஜி

வருகின்ற 12 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில், வெள்ளிக்கிழமையன்று பிறை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால், வரும் 12 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாஹூத்தீன் முகமது அய்யூப் அறிவித்துள்ளார்.

Exit mobile version