தமிழக மக்களுக்கு ஆளுநர் பொங்கல் வாழ்த்து

தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழர் வாழ்விற்கு மகிழ்ச்சியூட்டும் திருநாள் பொங்கல் மற்றும் சங்கராந்தியை முன்னிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அறுவடையின் சிறப்பைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், அன்றாட வாழ்விற்கு உறுதுணையாக உள்ள சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் விழா கொண்டாடப்படுவதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேளாண் மக்களின் உழைப்பையும் தியாகத்தையும் போற்றிடும் வகையில் எழுச்சியுடன் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருவதாகவும், இந்த தை திருநாளில் நாம் பெற்ற அறுவடைக்காக இயற்கைக்கு பிரார்த்தைனைகளையும், நன்றியினையும் செலுத்துவோம் என்றும் ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொண்டாட்டம், சமத்துவம், சகோதரத்துவத்துடன் பொங்கல் திருநாளில் அனைத்து குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அள்ளித்தர வாழ்த்துவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version