அதிமுக தலைமை பொங்கல் வாழ்த்து

தமிழக மக்களுக்கு அதிமுக சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இருவரும் கூட்டாக வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர். அதில், தமிழர் திருநாள் என்று போற்றப்படும் சிறப்புமிக்க பொங்கல் பெருவிழாவை உலகெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் தமிழர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர். பொங்கல் திருநாளின் மகிமைகளை கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் எடுத்துரைத்துள்ளனர். எந்நாளும், மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக, மக்களுக்காகவே உழைப்போம் என்றும், தமிழ்நாட்டை உயர்த்தி வைப்போம் என்பதே தங்களது பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version