சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் தேநீர் விருந்து

சுதந்திர தின விழாவை ஒட்டி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேநீர் விருந்து அளித்தார்.

73-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட்டப்பட்டது. இதையொட்டி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேநீர் விருந்து அளித்தார். இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உயர் நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, அன்பழகன் உள்ளிட்டோரும், சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Exit mobile version