சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடியேற்றினார் தலைமை நீதிபதி

சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தஹில் ரமணி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திர தினத்தையொட்டி அரசு அலுவலகங்கள் விழா கோலம் பூண்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி தஹில் ரமணி, கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து, மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், உயர் நீதிமன்றத்தின் ஆண்டறிக்கையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டார். உயர் நீதிமன்ற முன்னாள் மற்றும் இந்நாள் நீதிபதிகள், காவல்துறை தலைவர் திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Exit mobile version