5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை

 

5 மற்றும் 8-ம் வகுப்புக்கான பொது தேர்வு குறித்து தமிழக அமைச்சரவை முடிவு ஏதும் எடுக்கவில்லை என்பதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த பெரியகொடிவேரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 6 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்சாலை மற்றும் வடிகால் வசதி அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து தமிழக அமைச்சரவை தான் முடிவு செய்ய வேண்டும் என்றார். ஆனால் அவ்வாறு எந்த முடிவையும் தமிழக அரசு எடுக்கவில்லை என சுட்டிக் காட்டிய அமைச்சர் செங்கோட்டையன், பொதுமக்கள் யாரும் அச்சப்படத்தேவையில்லை என தெரிவித்தார்.

Exit mobile version