சீரமைப்பு பணிகளால் திருவாரூர் தேர்தல் ஒத்திவைப்பு

கஜா புயல் சீரமைப்பு பணிகள் காரணமாக திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

திருவாரூர் தொகுதி உறுப்பினரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி உடல்நலக குறைவால் காலமானார். இந்நிலையில் கஜா புயலால் திருவாரூர் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கஜா புயலால் சீரமைப்பு பணிகள் முடிவடையாத நிலையில் உள்ளதாலும், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால் தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் சீரமைப்பு பணிகள் காரணமாக, திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version