கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் புதைவட கம்பிகள் பொருத்த நடவடிக்கை

செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் அரசுவின் , கேள்விக்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, புயலால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் புதைவட கம்பிகள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் புதைவட கம்பிகள் அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மின் தடை பிரச்சனையை போக்க இன்சுலேட்டர் வயர்களுக்கு பதிலாக பாலிமர் வயர்கள் மாற்றப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Exit mobile version